Sunday, May 25, 2008

சிங்கைத் திருநாடு….!

__கவிஞரேறு அமலதாசன்

வானொரு பக்கம் நிலமொரு பக்கம்
வளம்பாடும்
கானொரு பக்கம் கடலொரு பக்கம்
நலம்பாடும்
மானொரு பக்கம் மயிலொரு பக்கம்
விளையாடும்
தேனொரு பக்கம் பாலொரு பக்கம்
வழிந்தோடும்

பொழிலொரு பக்கம் முகிலொரு பக்கம்
புகழ்வார்க்கும்
எழிலொரு பக்கம் தொழிலொரு பக்கம்
எழுந்தார்க்கும்
வினையொரு பக்கம் மனையொரு பக்கம்
விரைந்தோங்கும்
துணையொரும் பக்கம் தோளொரு பக்கம்
தொண்டாற்றும்

திறமொரு பக்கம் தரமொரு பக்கம்
திருவாகும்
அறமொரு பக்கம் மறமொரு பக்கம்
அரணாகும்
கலையொரு பக்கம் மொழியொரு பக்கம்
கவினார்க்கும்
மலையென ஓங்கும் மாண்புறுச் சிங்கைத்
திருநாடு


*********

No comments: