Tuesday, July 29, 2008

வாழ்வாங்கு வாழ்க !

____ கவிஞரேறு அமலதாசன்



நலமோங்கி ஆள்க !
நற்பேறேச் சூழ்க !
வளம்மேலும் காண்க !
வாழ்வாங்கு வாழ்க !
அப்துல் ஜலீல் – முகமது அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் – புகழ்மிகு அப்துல் ஜலீல்

வாரி வாரி வழங்கும் காதி !
வானம் தாண்டி வளரும் போதி !
பாரி மட்டும் வள்ளல் இல்லை
பரிவில் நீயும் மாரி பிள்ளை !
அப்துல் ஜலீல் – முகமது அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் – புகழ்மிகு அப்துல் ஜலீல்

அன்னைத் தமிழை உயிரில் வார்த்தாய் !
அல்லா நெறியில் ஒன்றி ஈர்த்தாய் !
முன்னை மரபை ஒட்டிக் காப்பாய் !
முத்து மணியாய் ஒளிர்ந்துப் பூப்பாய் !
அப்துல் ஜலீல் – முகமது அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் – புகழ்மிகு அப்துல் ஜலீல்

இளையர் உலகம் விழித்துக் கொள்ள
ஈந்துக் கல்விக் கண்கள் அளித்தாய் !
இலக்கி யத்தேர் எழிலாய் ஓட
இரக்கம் காட்டும் இதயம் விரித்தாய் !
அப்துல் ஜலீல் – முகமது அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் – புகழ்மிகு அப்துல் ஜல்லீல்

கலைகள் செழிக்கக் காலம் சிறக்கக்
கர்ணன் போலத் தோள்கள் கொடுத்தாய் !
தலையை நிமிர்த்தித் தரணி போற்றும்
தங்கக் குமணன் தகைமை வளர்த்தாய் !
அப்துல் ஜலீல் – முகமது அப்துல் ஜலீல்
அப்துல் ஜலீல் – புகழ்மிகு அப்துல் ஜலீல்


குறிப்பு :________________________

சிங்கப்பூர்த் தொழிலதிபர், மினி என்வைரன்மெண்ட் பணி, நிறுவன இயக்குநர்,
திரு. எஸ். எம். ஏ. ஜலீல் PBM அவர்களின், பொன்விழா (27/07/2008) கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவரும்; மதியுரைஞருமான கவிஞரேறு அமலதாசன் அவர்கள், மனமுவந்து யாத்தெடுத்து
அணிவிக்கும் வாழ்த்துப் பாமாலை.