Friday, June 27, 2008

நறுந்தமிழ் !

___கவிஞரேறு அமலதாசன்



குயிலுக்கும் அமிழ்தான குரல்வளம் தந்தது! – எம்
குருதியில் கமழ்கின்ற நறுந்தமிழ்ப் பண்பது!
பயில்தோறும் பயன்நல்கும் பொருள்வளம் கொண்டது! – செம்
பரிதிபோல் வழிகாட்டித் திருநிலம் வந்தது!



குழல்நாவில் யாழ்நரம்பில் கொஞ்சிடும் சிந்தது! – திருக்
குறளென்னும் செல்வத்தால் கோலோச்சி வென்றது!
நிழலுக்கும் நிழல்செய்யும் நேயத்தில் மீனது! - கடல்
நீரோடும் நெருப்போடும் போராடி மீண்டது!


அமிழ்தினும் மேலான அருட்கொடை அல்லவோ? – அதன்
அருமையைச் சிறுபோதில் எளிதிலே சொல்லவோ?
தமிழர்க்குத் தமிழின்றி விடிவுகள் உள்ளதோ? - இந்தத்
தரணியில் பிரிதொன்று தமிழினும் வல்லதோ?

******************************

No comments: